மலாய்க்காரர்களிடையே நிலவும் பிளவுக்கும் போராட்டங்களுக்கும் அவர்களே பொறுப்பு என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.
அம்னோவின் முன்னாள் தலைவரான துன் மகாதீர், மலாய்க்காரர்களிடையே பல அரசியல் கட்சிகள் உருவானது சமூகத்தை துண்டாக்கி, ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதனால் மலாய்க்காரர்கள் "தோல்வியாளர்களாக" மாறி வருவதாகவும், இது 'தானா மலாயு' பிறருக்குச் சொந்தமான நிலமாக மாறும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
"முன்பு அம்னோவின் கீழ் மலாய்க்காரர்கள் ஒற்றுமையாக இருந்ததால்தான் ஆங்கிலேயர்களிடமிருந்து நாட்டை மீட்க முடிந்தது. இங்கே முக்கியமானது அம்னோ என்ற கட்சி அல்ல, அது உருவாக்கிய ஒற்றுமைதான்," என்று அவர் கூறினார்.
மேலும், ஒரு கட்சியின் தலைவராகவோ அல்லது பிரதமர் வேட்பாளராகவோ இருப்பதை விட, மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் திறமை கொண்டிருப்பதே தற்போதைய அவசியமாகும் என்றும் டாக்டர் மகாதீர் வலியுறுத்தினார்.








