சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், கெடா, திரெங்கானு, கிளந்தான் ஆகிய ஆறு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வேளையில் வாக்களிப்பு விறுவிறுப்பாக நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 96 லட்சத்து 70ஆயிரம் பேர் வாக்களிக்கவிருக்கும் இத்தேர்தலுக்காக 3,190 வாக்குச்சாவடிகள் காலையில் திறக்கப்பட்டு மாலை 6 மணிக்கு மூடப்படவிருக்கின்றன.
மதியம் 12 மணி வரையில் 30 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. மதியம் 12 மணி வரையில் 6 மாநிலங்களுக்கான வாக்களிப்பு எவ்வித அசாம்பாவிதமின்றி சுமூகமாக நடைபெற்று வருவதாக போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்துள்ளார். அனைத்து வாக்கு மையங்களிலும் நடப்பு நிலை கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
6 மாநிலங்களின் தேர்தலில் 245 தொகுதிகளில் 572 வேட்பாளரகள் போட்டியிடுகின்றனர்.
ஒன்பது அரசியல் கட்சிகள் மற்றும் 41 சுயேட்சைகள் இத்தேர்தலில் போட்டியிட்டாலும் இது பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணிக்கும், பெரிக்காத்தான் நேஷனலுக்கும் இடையில் நிலவும் பலப்பரீட்சையாகவே கருதப்படுகிறது. முதல் தேர்தல் முடிவு இரவு 8 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறத.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


