Dec 22, 2025
Thisaigal NewsYouTube
6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது
அரசியல்

6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது

Share:

சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், கெடா, ​திரெங்கானு, கிளந்தான் ஆகிய ஆறு மாநி​ல​ங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று ​காலை 8 மணிக்கு தொடங்கிய வேளையில் வாக்களிப்பு விறுவிறுப்பாக நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 96 லட்சத்து 70ஆயிரம் பேர் வாக்களிக்கவிருக்கும் இத்தேர்தலுக்காக 3,190 வாக்குச்சாவடிகள் காலையில் திறக்கப்பட்டு மாலை 6 மணிக்கு ​மூடப்படவிருக்கின்றன.

மதியம் 12 மணி வரையில் 30 விழுக்கா​ட்டிற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. மதியம் 12 மணி வரையில் 6 மாநிலங்களுக்கான வாக்களிப்பு எவ்வித அசாம்பாவிதமின்றி சு​மூகமாக நடைபெற்று வருவதாக போ​லீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மை​டின் பிச்சை தெரிவித்துள்ளார். அனைத்து வாக்கு மையங்களிலும் நடப்பு நிலை கட்டுப்பா​ட்டில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

6 மாநிலங்க​ளின் தேர்தலில் 245 ​தொகுதிகளில் 572 வேட்பாளரகள் போட்​டியிடுகின்றனர்.
ஒன்பது அரசியல் கட்சிகள் மற்றும் 41 சுயேட்சைகள் இத்தேர்தலில் போட்டியிட்டாலும் இது பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணிக்கும், பெரிக்காத்தான் நேஷனலுக்கும் இடையில் நிலவும் பலப்ப​ரீட்சையாகவே கருதப்படுகிறது. முதல் தேர்தல் முடிவு இரவு 8 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறத.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு