Jan 10, 2026
Thisaigal NewsYouTube
பேராக் பெர்சாத்து தலைவர்கள் பலருக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடிதம்
அரசியல்

பேராக் பெர்சாத்து தலைவர்கள் பலருக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடிதம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.10-

கடந்த ஆண்டு, டிசம்பர் 10-ஆம் தேதி, பெர்சாத்து தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் பதவி விலகக் கோரி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட, பேராக் மாநில பெர்சாத்து பிரிவுத் தலைவர்கள் பலருக்கு, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த கடிதமானது PDF வடிவில் தனது வாட்சாப்பிற்கு அனுப்பப்பட்டதாக தெலுக் இந்தான் பெர்சாத்து கட்சித் தலைவர் கமாருடின் மாஜிட் உறுதிப்படுத்தியுள்ளார்.

பெர்சாத்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் டத்தோ முஹமட் ரட்ஸி மனானால் கையெழுத்திடப்பட்ட அக்கடிதத்தில், வரும் ஜனவரி 14-ஆம் தேதி, பெர்சாத்து தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டிருப்பதாக கமாருடின் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், இக்கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த ஒரு நடவடிக்கையையும் தாம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கமாருடின் தெரிவித்துள்ளார்.

கமாருடினைத் தவிர, லாருட், கோப்பேங், பாடாங் ரெங்கா, தாப்பா மற்றும் பாசீர் சாலாக் உள்ளிட்ட பல பெர்சாத்து பிரிவுத் தலைவர்களும் இதே கடிதத்தைப் பெற்றுள்ளனர்.

Related News

"சைஃபுடின் அப்துல்லா மீதான நடவடிக்கை நியாயமற்றது" - இந்திரா மாஹ்கோத்தா பெர்சாத்து தலைமை கண்டனம்

"சைஃபுடின் அப்துல்லா மீதான நடவடிக்கை நியாயமற்றது" - இந்திரா மாஹ்கோத்தா பெர்சாத்து தலைமை கண்டனம்

சபா இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு: கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி, லாமாக்கில் நேரடிப் போட்டி நிலவுகிறது

சபா இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு: கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி, லாமாக்கில் நேரடிப் போட்டி நிலவுகிறது

டாக்டர் அக்மாலிடமிருந்து ராஜினாமா கடிதத்தை அம்னோ தலைமையகம் இன்னும் பெறவில்லை

டாக்டர் அக்மாலிடமிருந்து ராஜினாமா கடிதத்தை அம்னோ தலைமையகம் இன்னும் பெறவில்லை

துருக்கியிடமிருந்து கிடைக்கப் பெற்ற Order of the Republic விருது அனைத்து மலேசியர்களுக்கும் உரியது: பிரதமர் அன்வார் நெகிழ்ச்சி

துருக்கியிடமிருந்து கிடைக்கப் பெற்ற Order of the Republic விருது அனைத்து மலேசியர்களுக்கும் உரியது: பிரதமர் அன்வார் நெகிழ்ச்சி

உட்கட்சி பூசல்களைத் தவிர்த்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள்: கூட்டணிக் கட்சிகளுக்கு பிரதமரின் அரசியல் செயலாளர் வலியுறுத்து

உட்கட்சி பூசல்களைத் தவிர்த்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள்: கூட்டணிக் கட்சிகளுக்கு பிரதமரின் அரசியல் செயலாளர் வலியுறுத்து

பெரிக்காத்தான் நேஷனலின் புதிய தலைவராக அகமட் சம்சூரி நியமிக்கப்படலாம்

பெரிக்காத்தான் நேஷனலின் புதிய தலைவராக அகமட் சம்சூரி நியமிக்கப்படலாம்