அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் 245 தொகுதிகளில் 570 வேட்பாளரகள் போட்டியிடுகின்றனர் என்று தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி சலே அறிவித்துள்ளார்.
திரெங்கானு, கிளந்தான், கெடா,பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் அகிய ஆறு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலின் வேட்புமனுத்தாக்கல் இன்று காலையில் நடைபெற்றது. 245 தொகுதிகளில் 181 தொகுதிகளில் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.
51 தொகுதிகளில் மும்மனைப்போட்டி ஏற்பட்டுள்ள வேளையில் 13 தொகுதிகளில் 4 முனைப் போட்டியும், ஒரு தொகுதியில் 5 முனைப்போட்டியும் ஏற்பட்டுள்ளதாக டான்ஸ்ரீ அப்துல் கனி சலே தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் ஒன்பது கட்சிகள் மற்றும் 41 சுயேட்சைகள் இத்தேர்தலில் போட்யிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோத்தா மலாக்கா சட்டமன்றத் தொகுதியில் நியமனம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களில் அதிக வயதுடையவர் பினாங்கு, ஜெரேஜாக் தொகுதியில் போட்டியிடும் 80 வயது வேட்பாளர் ஆவார். ஆகக் சிறு வயது வேட்பாளர் சிலாங்கூர் , புக்கிட் அந்தரா பங்சா தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு வயது 23 ஆகும். தேர்தலுக்கான பிரச்சாரங்கள் மற்றும் பரப்புரைகள் அனைத்தம் சரியாக வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி இரவு 11.59 மணியுடன் முடிவடைவதாகவும் டான்ஸ்ரீ அப்துல் கனி நினைவுறுத்தினார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


