ஆறு மாநிலங்களின் தேர்தலை எதிர்கொள்வதற்கு பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் இயக்குநரான நியமிக்கப்பட்டுள்ள கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூருக்கு நாவடக்கம் அவசியம் என்று பாஸ் கட்சியின் பொதுக்குழுத் தலைவர் ஹாசிம் ஜாசின் எச்சரித்துள்ளார்.
மதம், இனம், ஆட்சியாளர் சம்பந்தப்பட்ட 3 R விவகாரத்தை ஒரு போதும் மீறி விட வேண்டாம் என்று கெடா மந்திரி புசாருக்கு ஹாசிம் ஜாசின் நினைவுறுத்தியுள்ளார்.
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராப்புடின் .இட்ரிஷ் ஷாவை நிந்தித்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள சனூசிக்கு எதிராக போலீஸ் புகார்கள் செய்யப்பட்டு வரும் வேளையில் அவர், தற்போது புக்கிட் அமான் போலீஸ் விசாரணைக்கு ஆளாகியுள்ளார்.
இந்நிலையில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சர்ச்சைக்குரிய உரையை நிகழ்ந்த வேண்டாம் என்று சனூசியை அந்த பொதுக்குழுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


