Nov 25, 2025
Thisaigal NewsYouTube
சபாவில் இராணுவம், போலீஸ் துறையைச் சேர்ந்தவர்களுக்கான முன்கூட்டியே வாக்குப்பதிவு துவங்கியது
அரசியல்

சபாவில் இராணுவம், போலீஸ் துறையைச் சேர்ந்தவர்களுக்கான முன்கூட்டியே வாக்குப்பதிவு துவங்கியது

Share:

கோத்தா கினபாலு, நவம்பர்.25-

சபா 17-ஆவது சட்டமன்றத் தேர்தலின் முன்கூட்டியே வாக்குப்பதிவு இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது.

45 தொகுதிகளைச் சேர்ந்த தகுதி பெற்ற 24,426 வாக்காளர்களில், இராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைகளும் அடங்குவர்.

சபா மாநிலத்திலுள்ள போலீஸ் தலைமையகம் மற்றும் இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாக்களிப்பு மையங்களில், இன்று மாலை 5 மணி வரையிலும் வாக்களிப்பு நடைபெறும் என தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் அறிவித்துள்ளது.

சபா சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் இம்முறை 73 தொகுதிகளில் 596 பேர் போட்டியிடுகின்றனர். பல தொகுதிகளில் பல்முனைப் போட்டிகள் ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஆர் தெரிவித்துள்ளது.

Related News