Mar 6, 2026
Thisaigal NewsYouTube
புதிய முயற்சியை மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
அரசியல்

புதிய முயற்சியை மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Share:

டிச. 20-

மலேசியா ஏர்லைன்ஸ் MH370 விமானத்தைத் தேடுவதற்கானப் புதிய முயற்சியை மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த Ocean Infinity நிறுவனம் இந்தப் பணியை மேற்கொள்ளும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இந்த விமானத்தின் மர்மத்தை விடுவிக்க மீண்டும் தேடுதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

இந்தியப் பெருங்கடலில் 15 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கடலுக்கு அடியில் தேடுதல் பணிகள் நடைபெறும். வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் அண்மையத் தகவல் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் இந்த புதிய தேடல் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே அரசாங்கம் Ocean Infinityக்குப் பணம் செலுத்தும்.

இந்த முடிவு, MH370 விமானத்தில் பயணித்த குழு, பயணிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு பதிலளிக்கும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சியை காட்டுகிறது என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி