ஜொகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேசனல் கட்சிக்கு இளைஞர்களின் ஆதரவு பெருகியுள்ளதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும், இது வயது அடிப்படையில் அல்லாமல் இனங்களின் விழுக்காடைக் குறிப்பதாகவும் ஜசெகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒங் கியான் மிங் தெரிவித்துள்ளார்.
மலாய் வாக்காளர்களைப் பொறுத்தவரை, அனைத்து வயதுப் பிரிவினரிடமும் பாரிசான் நேசனல் கட்சிக்கு ஆதரவு 81.4 விழுக்காடு முதல் 86.8 விழுக்காடு வரை சீராக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். இளம் வாக்காளர்கள் மத்தியில் மலாய் வாக்காளர்களின் விழுக்காடு அதிகமாக இருப்பதாலேயே, ஒட்டுமொத்தமாக இளைஞர்கள் பாரிசான் நேசனலை ஆதரிப்பது போன்ற தோற்றம் ஏற்படுவதாக அவர் விளக்கம் அளித்தார்.
மேலும், பெரிக்காத்தான் நேசனல் மீதான இளைஞர்களின் முந்தைய ஆதரவு தற்போதைய தேர்தலில் சரிந்துள்ளதாகவும், மலாய் வாக்காளர்களின் வாக்குப்பதிவு அனைத்து வயதுப் பிரிவுகளிலும் சமமாக இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.








