Oct 27, 2025
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் நாளை திட்டமிட்டப்படி பேரணி நடைபெறும்
அரசியல்

கோலாலம்பூரில் நாளை திட்டமிட்டப்படி பேரணி நடைபெறும்

Share:

ஷாலாம், பிப்ரவரி 26 -

கோலாலம்பூர், நாடாளுமன்ற கட்டடத்திற்கு முன்புறம் உள்ள தேசிய நினைவு சின்ன வெளிவளாகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை திட்டமிட்டப்படி பேரணி நடைபெறும் என்று தேர்தல் சீர்திருத்தங்களை கோரும் இயக்கமான பெர்சி அறிவித்துள்ளது.

பேரணி குறித்து தெரிவிக்கும் கடிதம், கோலாலம்பூர் டாங் வாங்கிமாவட்ட போலீஸ் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பெர்சே தலைவர் முகமட் பைசால் அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

இந்த பேரணியின் மூலம் 100 விழுக்காடு சீர்திருத்தங்களை கோரி, நடப்பு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேரணியின் போது அரசாங்கத்திடம் மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு மகஜர் வழங்கப்படுவது ஜனநாயக நாட்டில் வழக்கமான நடைமுறையாகும். எனவே இந்த பேரணி நடத்தப்படுவது புதியது அல்ல என்று அவர் விளக்கினார்.

Related News

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்