Apr 3, 2026
Thisaigal NewsYouTube
முதலில் உங்கள் உள்முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ளுங்கள்": MTUC- க்கு அமைச்சர் ரமணன் அறிவுறுத்து
அரசியல்

முதலில் உங்கள் உள்முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ளுங்கள்": MTUC- க்கு அமைச்சர் ரமணன் அறிவுறுத்து

Share:

2025-ஆம் ஆண்டுக்கான கிக் தொழிலாளர் சட்டம் அமலாக்கத்தில் போதுமான ஆலோசனைகள் நடத்தப்படவில்லை எனக் குற்றம் சாட்டிய மலேசியத் தொழிற்சங்க காங்கிரஸான MTUC- மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அமைச்சர், "இந்தச் சட்டம் தொடர்பாக 400-க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், MTUC அமைப்பிற்குள் இருக்கும் கோஷ்டி பூசல்களால் அவர்கள் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. ஒரு தரப்பு ஆதரிப்பதை மற்றொரு தரப்பு எதிர்க்கிறது. எனவே, அரசாங்கத்தின் மீது குறை கூறுவதை நிறுத்திவிட்டு, முதலில் உங்கள் உள்விவகாரங்களைச் சரிசெய்யுங்கள்," என டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ள இந்த 'சட்டம்', நாட்டில் உள்ள சுமார் 16.4 லட்சம் கிக் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் முறையான ஒப்பந்தப் பாதுகாப்பை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News