Apr 23, 2026
Thisaigal NewsYouTube
செயற்கை நுண்ணறிவு சவாலை எதிர்கொள்ள 6 லட்சம் தொழிலாளர்களுக்கு மறுகட்டமைப்பு திறன் பயிற்சி / மனித வள அமைச்சர் கூறுகிறார்
அரசியல்

செயற்கை நுண்ணறிவு சவாலை எதிர்கொள்ள 6 லட்சம் தொழிலாளர்களுக்கு மறுகட்டமைப்பு திறன் பயிற்சி / மனித வள அமைச்சர் கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 10-

நாடு எதிர்கொள்ளவிருக்கும் நுண்ணறிவு சவால்களை எதிர்கொள்வதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் சில துறைகளை சேர்ந்த சுமார் 6 லட்சம் தொழிலாளர்களுக்கு மறு கட்டமைப்பிற்கான திறன் பயிற்சி அளிக்கப்பட வேண்டியுள்ளது என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தயாரிப்பு, இலக்கவியல் மற்றும் பசுமை பொருளாதரம் ஆகிய மூன்று முக்கிய துறைகளை சார்ந்த நிலையில் கிட்டத்தட்டட ஆறு லட்சம் திறன்பெற்ற தொழிலாளர்களை தயார் படுத்த வேண்டிய அவசியம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க ஏஜென்சியான TalentCorp மேற்கொண்ட ஆய்வின் வழி இது தெரிவித்துள்ளது. மலேசியாவில் தற்போதைய தொழிலாளர்கள் பெரும்பாலும் தோட்டத்துறை, சேவைத்துறை, சில்லரை வர்த்தகம், உணவு தயாரிப்புத்தறை, உற்பத்தித்துறை உட்பட வழக்கமான தொழில்துறையில் மட்டுமே ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளனர்.
.
இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த துறைகளில் காத்திருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 6 லட்சம் தொழிலாளர்களுக்கு மறு கட்டமைப்பிற்கான திறன் பயிற்சியை அளிக்க வேண்டியுள்ளது என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டுள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!