லூனாஸ் சட்டமன்றத் தொகுதிற்கு உட்பட்ட இடங்களில் சாலைகள் மிக மோசமாக இருப்பதாக வட்டார மக்கள், அத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சி.அரிசந்திரனிடம் புகார் அளித்துள்ளனர்.
லூனாஸ் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் அரிசந்திரன் கடந்த 11 நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டு வரும் வேளையில் தொகுதி மக்கள் முன்வைக்கின்ற பல்வேறு பிரச்னைகளை செவிமடுத்து வருகிறார்.
தொகுதியில் வெற்றிப் பெறுவதற்கு முன்பே மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண முற்பட்டிருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் -மின் முன்னாள் அதிகாரியான அரிசந்திரன் இன்று காலையில் பிரதான சந்தையில் மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.
லூனாஸ் மற்றும் பாடாங் செராய் ஆகிய இடங்களுக்குச் செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை அரிசந்திரனிடம் சுட்டிக் காட்டியதுடன், மழைக்காலங்களில் இதனால் அதிகமாக விபத்துகள் நிகழ்வதையும் அவர்கள் விளக்கினர்.
இதேபோன்று பாடாங் செராய் - ஹென்ரேட்டா சாலையிலிருந்து பட்டவெத் செல்லும் சாலை வரை சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட வேண்டிய அவசியத்தையும் அவர்கள் வழியுறுத்தினர்.

Related News

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்


