Apr 23, 2026
Thisaigal NewsYouTube
நஜீப்பிற்கு ஆதரவு தெரிவித்து மூவாயிரம் பேர் திரண்டனர்
அரசியல்

நஜீப்பிற்கு ஆதரவு தெரிவித்து மூவாயிரம் பேர் திரண்டனர்

Share:

புத்ராஜெயா, ஜன.6-


நஜீப்பிற்கு ஆதரவு தெரிவித்து, புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றத்திற்கு வெளியே இன்று காலையில் நடந்த பேரணியில் இன்று சுமார் மூவாயிரம் பேர் திரண்டனர்.

இந்தப் பேரணிக்கு போலீஸ் துறை அனுமதி அளிக்கவில்லை.

எனினும் தங்களின் முன்னாள் தலைவரான நஜீப்பிற்கு ஆதரவு தெரிவித்து பாஸ் கட்சி ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் பேரணியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அம்னோ உறுப்பினர்களுக்கு கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் நினைவுறுத்தியிருந்தார்.

எனினும் இந்தப் பேரணியில் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் உட்பட அம்னோ உறுப்பினர்கள் என்று நம்பப்படும் பலர் கலந்து கொண்டுள்ளனர். அரசாங்க சார்பற்ற அமைப்புகளை சேர்ந்தவர்களும் காலை 6.30 மணியளவில் திரளத் தொடங்கியுள்ளனர்..

Justice For Najib மற்றும் Bebas Najib ஆகிய வாசகங்களை தாங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம், நஜீப் வாழ்க என்ற முழக்கத்தை பலர் சூளுரைத்தக்கொண்டு இருந்தனர்.

நஜீப் பேரணியில் தாம் கலந்து கொண்டது தனிப்பட்ட முறையிலாகும். இதற்கும் அம்னோவிற்கும் தொடர்பில்லை என்று அதன் இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அ கமால் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் ஓர் ஆண்மகன் என்ற முறையில் நெஞ்சுரத்துடன் பாஸ் கட்சி ஏற்பாட்டிலான இந்தப் பேரணியில் தாம் கலந்து கொண்டதாக அவர் தம்பட்டம் அடித்துக்கொண்டார்.

நஜீப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக திரண்ட ஆதரவாளர்களின் நிறைய பேருந்துகள், சாலைத் தடுப்பு சோதனையின் மூலம் தடுக்கப்பட்டு இருப்பதாக பாஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சனூசி நோர் உட்பட இன்னும் நிறைய அரசியல் பிரமுகர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!