தேர்தல் அன்று வாக்காளர்கள் வாக்களிப்பு மையங்களுக்கு வரவும், அவர்கள் வீடு திரும்பவும் இலவச பேருந்துப் பயணத்தை வழங்கும் யோசனையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் ஏற்க இயலாது என்று அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார். வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் இத்தகைய இலவச பேருந்துப் பயணங்களை வாக்காளர்களுக்கு ஏற்பாடு செய்வது பல்வேறு ஐயங்களுக்கு இடம் அளிக்கிறது என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார். பேருந்து பயணத்தின் போது நமக்கு தெரியாத விஷயங்கள் நடக்கலாம். இதுபோன்று ஊழலுக்கு வித்திடக்கூடிய ஊழல் சமூகமாக மாறக்கூடாது. அது நடத்தால் ஊழல்வாதிகளே தலைவர்களாக வரக்கூடிய நிலை ஏற்படலாம் என்று அஸாம் பாக்கி நினைவுறுத்தினார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


