நெகிரி செம்பிலான் இடைக்கால மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாரூன், தனது பாதுகாப்பான சிகாமட் தொகுதியை விட்டுவிட்டு, அம்னோவின் பாரம்பரியக் கோட்டையான லிங்கி தொகுதியில் போட்டியிட துணிச்சலான முடிவை எடுத்துள்ளார்.
பி.கே.ஆர் தேசியத் தலைமை இம்மாற்றத்திற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
தொடர்ந்து நான்கு முறை சிகாமட் தொகுதியைத் தக்கவைத்த அமினுடின், இம்முறை அம்னோ மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கட்சிகளின் சவால்களுக்கு மத்தியிலும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பலத்தை நிரூபித்து ஆட்சியைத் தக்கவைக்க இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.








