நெகிரி செம்பிலானில் அரச குடும்பம் தொடர்பான தற்போதைய நெருக்கடியைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளது.
அனைவரும் பொறுமையுடன் இருந்து, இந்த விவகாரம் சட்ட நடைமுறைகளின்படி தீர்க்கப்படுவதற்கு வழிவிட வேண்டும் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் வலியுறுத்தியுள்ளார்.
மந்திரி பெசார் டத்தோ டத்தோ இஸ்மாயில் லாசிம், தாம் வற்புறுத்தப்பட்டு பிரகடனத்தில் கையெழுத்திட்டதாக அளித்துள்ள போலீஸ் புகார் தொடர்பான தகவல்கள் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, சிரம்பானில் உள்ள விஸ்மா நெகிரி மாநிலச் செயலக வளாகத்திலும் பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பார்வையாளர்கள் தங்களின் வருகைக்கான காரணத்தையும், சந்திக்க விரும்பும் நபரின் பெயரையும் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








