Oct 19, 2025
Thisaigal NewsYouTube
பிற வேட்பாளர்கள் மீது வெறுப்புணர்வு வேண்டாம்
அரசியல்

பிற வேட்பாளர்கள் மீது வெறுப்புணர்வு வேண்டாம்

Share:

பெட்டாலிங் ஜெயா, மே.15

பிகேஆர் கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றத்தில் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள், பிரச்சாரத்தின் போது பிற வேட்பாளர்கள் மீது வெறுப்பைக் காட்டும் நோக்கில் செயல்பட வேண்டாம் என நினைவுறுத்தப்பட்டுள்ளது. கட்சியின் தொடர்புப் பிரிவுத் தலைவர் டத்தோ பாஃமி பாஃட்சீல் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார். பொதுத் தேர்தலின் போது எதிராளிகளை எதிர்கொள்வதில் ஒன்றாக ஒத்துழைக்கக் கட்சி உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் ஒவ்வொருவரும் அவசியமிக்கவர்கள். எனவே வெறுப்புணர்ச்சியைக் கைவிட்டு ஆரோக்கியமான முறையில் செயல்படுவது சிறந்தது என தொடர்புத்துறை அமைச்சருமான பாஃமி குறிப்பிட்டார்.

இவ்வேளையில் பிகேஆர் தேர்தல் முடிந்த பின் அரசாங்கத் தலைமைத்துவத்தில் எந்த மாற்றமும் இருக்காது என பிரதமர் உத்தரவாதம் அளித்திருப்பதாகவும் பாஃமி தெரிவித்தார். பிகேஆர் மத்தியத் தலைமைத்துவ மன்றத்திற்கானத் தேர்தல் இம்மாதம் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!