சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி, கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெர்மாத்தாங் சட்டமன்றத் தொகுதியில் கட்டப்பட்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உருவப்படத்தை தாங்கிய பதாகைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது குறித்து அத்தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகமது யாஹ்யா மத் சஹ்ரி புகார் தெரிவித்துள்ளார். அந்தப் பதாகையில் பிரதமர் அன்வாரின் படம் வெட்டப்பட்டு, பெரிய துவாரமிடப்பட்டுள்ளதாக முகமது யாஹ்யா குறிப்பிட்டார். நான்கு இடங்களில் கட்டப்பட்டுள்ள பதாகைகளில் இத்தகைய சிரைச்சேதம் நடத்தப்பட்டுள்ளதாக அவர் புகார் கூறியுள்ளார் சில பொறுப்பற்ற நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இச்சம்பவம் குறித்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முகமது யாஹ்யா கேட்டுக்கொண்டார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


