சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி, கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெர்மாத்தாங் சட்டமன்றத் தொகுதியில் கட்டப்பட்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உருவப்படத்தை தாங்கிய பதாகைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது குறித்து அத்தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகமது யாஹ்யா மத் சஹ்ரி புகார் தெரிவித்துள்ளார். அந்தப் பதாகையில் பிரதமர் அன்வாரின் படம் வெட்டப்பட்டு, பெரிய துவாரமிடப்பட்டுள்ளதாக முகமது யாஹ்யா குறிப்பிட்டார். நான்கு இடங்களில் கட்டப்பட்டுள்ள பதாகைகளில் இத்தகைய சிரைச்சேதம் நடத்தப்பட்டுள்ளதாக அவர் புகார் கூறியுள்ளார் சில பொறுப்பற்ற நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இச்சம்பவம் குறித்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முகமது யாஹ்யா கேட்டுக்கொண்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


