சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி, கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெர்மாத்தாங் சட்டமன்றத் தொகுதியில் கட்டப்பட்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உருவப்படத்தை தாங்கிய பதாகைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது குறித்து அத்தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகமது யாஹ்யா மத் சஹ்ரி புகார் தெரிவித்துள்ளார். அந்தப் பதாகையில் பிரதமர் அன்வாரின் படம் வெட்டப்பட்டு, பெரிய துவாரமிடப்பட்டுள்ளதாக முகமது யாஹ்யா குறிப்பிட்டார். நான்கு இடங்களில் கட்டப்பட்டுள்ள பதாகைகளில் இத்தகைய சிரைச்சேதம் நடத்தப்பட்டுள்ளதாக அவர் புகார் கூறியுள்ளார் சில பொறுப்பற்ற நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இச்சம்பவம் குறித்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முகமது யாஹ்யா கேட்டுக்கொண்டார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


