அண்மைய காலமாக மலேசியாவில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கிலும் இன நிலையிலானத் தூண்டுதல்களை ஏற்படுத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருவது குறித்து புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற விவகாரங்களில் வெறும் கண்டனங்களுடன் நிறுத்திக்கொள்ளாமல், சட்ட அமலாக்கத் துறையினர் பாகுபாடின்றி விரைவாகவும், தீர்க்கமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, வெறுப்புணர்வைத் தூண்டும் வீடியோக்கள் பரவுவதை மலேசியத் தகவல் தொடர்பு - பல்லூடக ஆணையம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், பிரதமர் இது குறித்துத் தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், பொதுமக்களும் இத்தகைய சர்ச்சைக்குரிய பதிவுகளைப் பகிராமல் பொறுமையைக் கடைப்பிடிப்பதன் மூலமே நாட்டின் ஒற்றுமையையும் அமைதியையும் பாதுகாக்க முடியும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியல்
மத நிந்தனை விவகாரங்கள்: அரசும் காவற்படையும் உடனடி நடவடிக்கை எடுக்கக் துளசி மனோகரன் கோரிக்கை
Related News

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்


