அண்மைய காலமாக மலேசியாவில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கிலும் இன நிலையிலானத் தூண்டுதல்களை ஏற்படுத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருவது குறித்து புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற விவகாரங்களில் வெறும் கண்டனங்களுடன் நிறுத்திக்கொள்ளாமல், சட்ட அமலாக்கத் துறையினர் பாகுபாடின்றி விரைவாகவும், தீர்க்கமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, வெறுப்புணர்வைத் தூண்டும் வீடியோக்கள் பரவுவதை மலேசியத் தகவல் தொடர்பு - பல்லூடக ஆணையம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், பிரதமர் இது குறித்துத் தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், பொதுமக்களும் இத்தகைய சர்ச்சைக்குரிய பதிவுகளைப் பகிராமல் பொறுமையைக் கடைப்பிடிப்பதன் மூலமே நாட்டின் ஒற்றுமையையும் அமைதியையும் பாதுகாக்க முடியும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியல்
மத நிந்தனை விவகாரங்கள்: அரசும் காவற்படையும் உடனடி நடவடிக்கை எடுக்கக் துளசி மனோகரன் கோரிக்கை
Related News

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்


