அண்மைய காலமாக மலேசியாவில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கிலும் இன நிலையிலானத் தூண்டுதல்களை ஏற்படுத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருவது குறித்து புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற விவகாரங்களில் வெறும் கண்டனங்களுடன் நிறுத்திக்கொள்ளாமல், சட்ட அமலாக்கத் துறையினர் பாகுபாடின்றி விரைவாகவும், தீர்க்கமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, வெறுப்புணர்வைத் தூண்டும் வீடியோக்கள் பரவுவதை மலேசியத் தகவல் தொடர்பு - பல்லூடக ஆணையம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், பிரதமர் இது குறித்துத் தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், பொதுமக்களும் இத்தகைய சர்ச்சைக்குரிய பதிவுகளைப் பகிராமல் பொறுமையைக் கடைப்பிடிப்பதன் மூலமே நாட்டின் ஒற்றுமையையும் அமைதியையும் பாதுகாக்க முடியும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியல்
மத நிந்தனை விவகாரங்கள்: அரசும் காவற்படையும் உடனடி நடவடிக்கை எடுக்கக் துளசி மனோகரன் கோரிக்கை
Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


