15 ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நெகிரிசெம்பிலான் சட்டமன்றம் வரும் ஜுலை முதல் தேதி சனிக்கிழமை கலைக்கப்படுவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ செரி அமினுடின் ஹாருன் அறிவித்துள்ளார். வரும் சனிக்கிழமை நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தை கலைப்பதற்கு மாநில சமஸ்தானாபதி துவான்கு முஹ்ரிஸ் இப்னி அல்மர்ஹும் துவான்கு முனாவிர் அனுமதி வழங்கியிருப்பதாக அமினுடின் ஹாருன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மாநில சமஸ்தானாபதியை இன்று காலையில் சந்தித்த போது மாநில சட்டமன்றத்தை கலைப்பதற்கான பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்று அமினுடின் ஹாருன் தெரிவித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


