கோலாலம்பூர், மே 28-
DAP- யை சேர்ந்த இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோவ்,வின் கணவர் ராமச்சந்திரன் முனியாண்டி தலைமை செயல்முறை அதிகாரியாக பதவி வகிக்கும் நிறுவனம், சிலாங்கூர் மாநிலத்தின் முக்கிய குத்தகையை பெற்று இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் DAP மவுனம் சாதித்து வருவது ஏன் என்று மசீச இன்று கேள்வி எழுப்பியுள்ளது.
இவ்விவகாரத்தில் புகார் கிடைக்குமானால் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்து இருப்பதை மனம் திறந்து ஏற்றுக்கொள்ள DAP தயாராக உள்ளதா? என்று மசீச. இளைஞர் தகவல் பிரிவின் தலைவர் நியோவ் சூ சியோங் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹன்னா இயோவின் கணவர், அந்த அரசாங்க குத்தகையை பெற்றுள்ளார் என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் வேளையில் DAP இதுவரையில் வாய்திறக்காதது ஏன் என்றும் நியோவ் சூ சியோங் வினவினார்.








