ஆறு மாநிலங்களில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்யுமாறு மலாய்க்காரர் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். இதுவரையில் தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் சீனர்கள் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பக்காத்தானையும் பாரிசானையும் ஆதரிப்பார்கள் என்று உத்தரவாதம் கிடைத்து விட்டது. தற்போது மலாய்க்காரர் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் ஆதரவுதான் தங்களுக்கு தேவைப்படுவதாக பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார். இன்று பினாங்கு,பாலிக் புலாவ், ஜாலான் சுங்கை பினாங் கில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டத்தோஸ்ரீ அன்வார், இந்த கோரிக்கையை விடுத்தார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


