ஆறு மாநிலங்களில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்யுமாறு மலாய்க்காரர் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். இதுவரையில் தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் சீனர்கள் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பக்காத்தானையும் பாரிசானையும் ஆதரிப்பார்கள் என்று உத்தரவாதம் கிடைத்து விட்டது. தற்போது மலாய்க்காரர் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் ஆதரவுதான் தங்களுக்கு தேவைப்படுவதாக பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார். இன்று பினாங்கு,பாலிக் புலாவ், ஜாலான் சுங்கை பினாங் கில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டத்தோஸ்ரீ அன்வார், இந்த கோரிக்கையை விடுத்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


