கோலாலம்பூர், ஜனவரி.06-
துருக்கிக்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அந்நாட்டின் மிக உயரிய விருதான Order of the Republic விருதைப் பெறவிருக்கிறார்.
இது வெளிநாட்டுத் தலைவர்களுக்கு துருக்கி வழங்கும் மிக உயரிய கௌரவமாகும். மலேசியா மற்றும் துருக்கி இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாரின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படவிருக்கிறது.
துருக்கி அதிபர் Recep Tayyip Erdogan, தலைநகர் அங்காராவில் உள்ள அதிபர் மாளிகையில் நாளை ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறும் அதிகாரப்பூர்வ நிகழ்வில் இந்த விருதை வழங்கவுள்ளார் என்று துருக்கிக்கான மலேசியத் தூதர் சஸாலி முஸ்தஃபா கமால் தெரிவித்துள்ளார்.








