வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி ஜோகூர் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்களை அமானா கட்சி அறிவித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் அவ்விரு தொகுதிகளையும் அமானா கட்சி தற்காத்துக்கொண்டதன் அடிப்டையில் இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் அமானா கட்சி போட்டியிடவிருக்கிறது.
பூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் அமானா கட்சி வேட்பாளராக ஜோகூர் மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் சுஹைஸான் கையாத் போட்டியிடுகிறார். சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியில் அமானா கட்சி சார்பாக நஸ்ரி அப்துல் ரஹ்மான் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை 23 ஆம் தேதி உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுதீன் அயூப் காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த பூலாய் நாடாமன்றத் தொகுதியிலும், சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியிலும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. மறைந்த சலாவுதீன் அயூப், அமானா கட்சியின் துணைத் தலைவர் ஆவார்.

Related News

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு


