வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி ஜோகூர் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்களை அமானா கட்சி அறிவித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் அவ்விரு தொகுதிகளையும் அமானா கட்சி தற்காத்துக்கொண்டதன் அடிப்டையில் இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் அமானா கட்சி போட்டியிடவிருக்கிறது.
பூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் அமானா கட்சி வேட்பாளராக ஜோகூர் மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் சுஹைஸான் கையாத் போட்டியிடுகிறார். சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியில் அமானா கட்சி சார்பாக நஸ்ரி அப்துல் ரஹ்மான் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை 23 ஆம் தேதி உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுதீன் அயூப் காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த பூலாய் நாடாமன்றத் தொகுதியிலும், சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியிலும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. மறைந்த சலாவுதீன் அயூப், அமானா கட்சியின் துணைத் தலைவர் ஆவார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


