வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி ஜோகூர் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்களை அமானா கட்சி அறிவித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் அவ்விரு தொகுதிகளையும் அமானா கட்சி தற்காத்துக்கொண்டதன் அடிப்டையில் இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் அமானா கட்சி போட்டியிடவிருக்கிறது.
பூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் அமானா கட்சி வேட்பாளராக ஜோகூர் மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் சுஹைஸான் கையாத் போட்டியிடுகிறார். சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியில் அமானா கட்சி சார்பாக நஸ்ரி அப்துல் ரஹ்மான் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை 23 ஆம் தேதி உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுதீன் அயூப் காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த பூலாய் நாடாமன்றத் தொகுதியிலும், சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியிலும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. மறைந்த சலாவுதீன் அயூப், அமானா கட்சியின் துணைத் தலைவர் ஆவார்.

Related News

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா


