வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி ஜோகூர் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்களை அமானா கட்சி அறிவித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் அவ்விரு தொகுதிகளையும் அமானா கட்சி தற்காத்துக்கொண்டதன் அடிப்டையில் இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் அமானா கட்சி போட்டியிடவிருக்கிறது.
பூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் அமானா கட்சி வேட்பாளராக ஜோகூர் மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் சுஹைஸான் கையாத் போட்டியிடுகிறார். சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியில் அமானா கட்சி சார்பாக நஸ்ரி அப்துல் ரஹ்மான் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை 23 ஆம் தேதி உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுதீன் அயூப் காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த பூலாய் நாடாமன்றத் தொகுதியிலும், சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியிலும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. மறைந்த சலாவுதீன் அயூப், அமானா கட்சியின் துணைத் தலைவர் ஆவார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்


