Aug 27, 2026
Thisaigal NewsYouTube
பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக பெண்டகனுக்கு அழைக்கப்பட்டார் மலேசியத் தற்காப்பு அமைச்சர்!
அரசியல்

பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக பெண்டகனுக்கு அழைக்கப்பட்டார் மலேசியத் தற்காப்பு அமைச்சர்!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.01-

மலேசியத் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் நோர்டின் அமெரிக்காவின் பெண்டகன் தலைமையகத்திற்குப் பயணம் செய்ய அதிகாரப்பூர்வ அழைப்பைப் பெற்றுள்ளார். இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், அமெரிக்காவுடனான மலேசியாவின் நீண்ட காலப் பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு தரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விரிவான பேச்சு வார்த்தை நடத்துவதாகும்.

அண்மையில், மலேசியாவும் அமெரிக்காவும் ஒரு புதிய பாதுகாப்புக் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், காலிட் நோர்டினின் இந்தப் பயணம் வட்டாரப் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை முறைப்படுத்த உதவும். இந்தச் சந்திப்புகள், சவால்கள் நிறைந்த தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், மலேசியாவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவதற்கும், நிலைத்தன்மையையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்கும் முக்கியமான அரச தந்திர நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

Related News