Nov 2, 2025
Thisaigal NewsYouTube
பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக பெண்டகனுக்கு அழைக்கப்பட்டார் மலேசியத் தற்காப்பு அமைச்சர்!
அரசியல்

பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக பெண்டகனுக்கு அழைக்கப்பட்டார் மலேசியத் தற்காப்பு அமைச்சர்!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.01-

மலேசியத் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் நோர்டின் அமெரிக்காவின் பெண்டகன் தலைமையகத்திற்குப் பயணம் செய்ய அதிகாரப்பூர்வ அழைப்பைப் பெற்றுள்ளார். இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், அமெரிக்காவுடனான மலேசியாவின் நீண்ட காலப் பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு தரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விரிவான பேச்சு வார்த்தை நடத்துவதாகும்.

அண்மையில், மலேசியாவும் அமெரிக்காவும் ஒரு புதிய பாதுகாப்புக் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், காலிட் நோர்டினின் இந்தப் பயணம் வட்டாரப் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை முறைப்படுத்த உதவும். இந்தச் சந்திப்புகள், சவால்கள் நிறைந்த தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், மலேசியாவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவதற்கும், நிலைத்தன்மையையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்கும் முக்கியமான அரச தந்திர நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

Related News

"நான் பதவி விலகிய பிறகு அம்னோ துண்டு துண்டாகி விட்டது" - மகாதீர் வருத்தம்

"நான் பதவி விலகிய பிறகு அம்னோ துண்டு துண்டாகி விட்டது" - மகாதீர் வருத்தம்

மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள், வெறும் 'அரசியல் நோக்கம்' கொண்டவை – அன்வார் விளக்கம்

மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள், வெறும் 'அரசியல் நோக்கம்' கொண்டவை – அன்வார் விளக்கம்

அம்னோ நிகழ்வுகளில் கைரி கலந்து கொள்ளவிருக்கிறார்

அம்னோ நிகழ்வுகளில் கைரி கலந்து கொள்ளவிருக்கிறார்

நஜீப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் டிசம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு

நஜீப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் டிசம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு

சைபர் பாதுகாப்பிற்கு முதலீடு செய்வது அவசியம் - தற்காப்பு அமைச்சர் வலியுறுத்தல்!

சைபர் பாதுகாப்பிற்கு முதலீடு செய்வது அவசியம் - தற்காப்பு அமைச்சர் வலியுறுத்தல்!

இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மலேசியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!

இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மலேசியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!