வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் அக்குடியரசின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகம், அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
அதிபர் பதவிக்கு போட்டியிடும் தமது விருப்பத்தை தர்மன் சண்முகம், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் கிடம் இன்று ஜுன் 8 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தியுள்ளார்.
சிங்கப்பூரின் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கு ஏதுவாக தர்மன் சண்முகம் தாம் அங்கம் வகிக்கின்ற பிஎபி கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகும் அதேவேளையில் அரசாங்கத்தில் தாம் வகித்து வரும் பொறுப்புகளையும் வரும் ஜுலை 7 ஆம் தேதி ராஜினாமா செய்யவிருக்கிறார்.
66 வயதான தர்மன் சண்முகம், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் பதவியை வகித்து வருகிறார். துணைப்பிரதமர் என்ற முறையில் நிதி அமைச்சர், கல்வி அமைச்சர் ஆகிய பொறுப்புகளையும் தர்மன் சண்முகம் வகித்துள்ளார்.

Related News

சபா தேர்தல் தோல்வி, ஒரு படிப்பினையாகக் கொள்ளப்படும்

மூன்று அமைச்சர்கள் மீண்டும் செனட்டராக பதவியேற்பு

சபா சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சித்தேனா? ஷாபி அஃப்டால் மறுப்பு

அமெரிக்காவுடனான ஒப்பந்தம்: துன் மகாதீர் போலீசில் புகார்

தேர்தலில் படுதோல்வி: ஒற்றுமை அரசாங்கத்தில் எந்த ஒரு பதவியையும் சபா ஜசெக ஏற்காது


