வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் அக்குடியரசின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகம், அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
அதிபர் பதவிக்கு போட்டியிடும் தமது விருப்பத்தை தர்மன் சண்முகம், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் கிடம் இன்று ஜுன் 8 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தியுள்ளார்.
சிங்கப்பூரின் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கு ஏதுவாக தர்மன் சண்முகம் தாம் அங்கம் வகிக்கின்ற பிஎபி கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகும் அதேவேளையில் அரசாங்கத்தில் தாம் வகித்து வரும் பொறுப்புகளையும் வரும் ஜுலை 7 ஆம் தேதி ராஜினாமா செய்யவிருக்கிறார்.
66 வயதான தர்மன் சண்முகம், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் பதவியை வகித்து வருகிறார். துணைப்பிரதமர் என்ற முறையில் நிதி அமைச்சர், கல்வி அமைச்சர் ஆகிய பொறுப்புகளையும் தர்மன் சண்முகம் வகித்துள்ளார்.

Related News

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து


