வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் அக்குடியரசின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகம், அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
அதிபர் பதவிக்கு போட்டியிடும் தமது விருப்பத்தை தர்மன் சண்முகம், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் கிடம் இன்று ஜுன் 8 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தியுள்ளார்.
சிங்கப்பூரின் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கு ஏதுவாக தர்மன் சண்முகம் தாம் அங்கம் வகிக்கின்ற பிஎபி கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகும் அதேவேளையில் அரசாங்கத்தில் தாம் வகித்து வரும் பொறுப்புகளையும் வரும் ஜுலை 7 ஆம் தேதி ராஜினாமா செய்யவிருக்கிறார்.
66 வயதான தர்மன் சண்முகம், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் பதவியை வகித்து வருகிறார். துணைப்பிரதமர் என்ற முறையில் நிதி அமைச்சர், கல்வி அமைச்சர் ஆகிய பொறுப்புகளையும் தர்மன் சண்முகம் வகித்துள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
