Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டோம் மஇகா திட்டவட்டம்
அரசியல்

பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டோம் மஇகா திட்டவட்டம்

Share:

வரும் ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் மஇ.கா ஈடுபடாது என்று அக்கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பாரிசான் நேஷனல் வேட்பாளர்களுக்காக மட்டுமே மஇகா தேர்தல் களத்தில் இறங்கும் என்று அதன் முன்னணி தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் நேற்று நடைபெற்ற அவசர மத்திய செயலவைக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த தலைவர் கூறுகிறார்.

தேர்தல் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் மஇகாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மஇகா மதிக்கப்படவில்லை. கட்சிக்கு நியாயமான எண்ணிக்கையில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்காக மஇகா உறுப்பினர்கள் களம் இறக்க மாட்டார்கள் என்று அந்த முக்கியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் மஇகாவினால் இனியும் பொறுமை காக்க முடியாது. மஇகா தேர்தலில் போட்டியிடுவதைவிட அதற்கு தன்மானமும், அதன் எதிர்காலமும்தான் முக்கியம் என்று அந்த தலைவர் கூறுகிறார்.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்