வரும் ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் மஇ.கா ஈடுபடாது என்று அக்கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பாரிசான் நேஷனல் வேட்பாளர்களுக்காக மட்டுமே மஇகா தேர்தல் களத்தில் இறங்கும் என்று அதன் முன்னணி தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் நேற்று நடைபெற்ற அவசர மத்திய செயலவைக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த தலைவர் கூறுகிறார்.
தேர்தல் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் மஇகாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மஇகா மதிக்கப்படவில்லை. கட்சிக்கு நியாயமான எண்ணிக்கையில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்காக மஇகா உறுப்பினர்கள் களம் இறக்க மாட்டார்கள் என்று அந்த முக்கியத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் மஇகாவினால் இனியும் பொறுமை காக்க முடியாது. மஇகா தேர்தலில் போட்டியிடுவதைவிட அதற்கு தன்மானமும், அதன் எதிர்காலமும்தான் முக்கியம் என்று அந்த தலைவர் கூறுகிறார்.

அரசியல்
பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டோம் மஇகா திட்டவட்டம்
Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
