பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து செயல்படவே மூடா கட்சி விரும்பியது. ஆனால், பல்வேறு நிலைகளில் பக்காத்தான் ஹராப்பானினால் மூடா கட்சி புறக்கணிக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் மனம் திறந்துள்ளார். டத்தோஸ்ரீ அன்வாருக்கு தமது ஆதரவை வழங்கியிருக்கும் மூடா கட்சி, ஓர் ஆதரவு கட்சி என்ற முறையில் பிரதமர் அன்வாருடன் ஓர் எளிய சந்திப்பை நடத்துவதற்கு தேதி கேட்டு மூன்று முறை கடிதம் அனுப்பியது. ஆனால், அதற்கு எந்த பதிலும் இல்லாத நிலையில் தாங்கள் கைவிடப்பட்டதாக சையிட் சாடிக் குறிப்பிட்டார்.
தாங்கள் அனுப்பிய கடிதங்களை படிப்பதற்குகூட நேரமில்லை என்று பக்காத்தான் ஹராப்பான் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறிய போது, தாங்கள் மற்றவர்களால் எள்ளி நகையாடப்பட்டதாக சையிட் சாடிக் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


