பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து செயல்படவே மூடா கட்சி விரும்பியது. ஆனால், பல்வேறு நிலைகளில் பக்காத்தான் ஹராப்பானினால் மூடா கட்சி புறக்கணிக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் மனம் திறந்துள்ளார். டத்தோஸ்ரீ அன்வாருக்கு தமது ஆதரவை வழங்கியிருக்கும் மூடா கட்சி, ஓர் ஆதரவு கட்சி என்ற முறையில் பிரதமர் அன்வாருடன் ஓர் எளிய சந்திப்பை நடத்துவதற்கு தேதி கேட்டு மூன்று முறை கடிதம் அனுப்பியது. ஆனால், அதற்கு எந்த பதிலும் இல்லாத நிலையில் தாங்கள் கைவிடப்பட்டதாக சையிட் சாடிக் குறிப்பிட்டார்.
தாங்கள் அனுப்பிய கடிதங்களை படிப்பதற்குகூட நேரமில்லை என்று பக்காத்தான் ஹராப்பான் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறிய போது, தாங்கள் மற்றவர்களால் எள்ளி நகையாடப்பட்டதாக சையிட் சாடிக் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


