பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து செயல்படவே மூடா கட்சி விரும்பியது. ஆனால், பல்வேறு நிலைகளில் பக்காத்தான் ஹராப்பானினால் மூடா கட்சி புறக்கணிக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் மனம் திறந்துள்ளார். டத்தோஸ்ரீ அன்வாருக்கு தமது ஆதரவை வழங்கியிருக்கும் மூடா கட்சி, ஓர் ஆதரவு கட்சி என்ற முறையில் பிரதமர் அன்வாருடன் ஓர் எளிய சந்திப்பை நடத்துவதற்கு தேதி கேட்டு மூன்று முறை கடிதம் அனுப்பியது. ஆனால், அதற்கு எந்த பதிலும் இல்லாத நிலையில் தாங்கள் கைவிடப்பட்டதாக சையிட் சாடிக் குறிப்பிட்டார்.
தாங்கள் அனுப்பிய கடிதங்களை படிப்பதற்குகூட நேரமில்லை என்று பக்காத்தான் ஹராப்பான் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறிய போது, தாங்கள் மற்றவர்களால் எள்ளி நகையாடப்பட்டதாக சையிட் சாடிக் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


