Mar 4, 2026
Thisaigal NewsYouTube
நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்
அரசியல்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.22-

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு வீட்டுக் காவல் தொடர்பில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மீதான விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம் என்று அம்னோ தலைவர் டத்தோஸ் ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி இன்று கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மாமன்னர் பிறப்பித்ததாகக் கூறப்படும் அரசாணை உத்தரவு தொடர்பில் நஜீப்பின் விண்ணப்பத்தை நிராகரித்து இருக்கும் உயர் நீதிமன்ற முடிவு தொடர்பில் டிஏபி- யைச் சேர்ந்த சில தலைவர்கள் உச்சிக் குளிர்ந்துள்ளதாகக் கூறப்படுவது தொடர்பில் துணைப்பிரதமருமான அஹ்மாட் ஸாஹிட் இந்த நினைவுறுத்தலை வழங்கினார்.

உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, "இந்த ஆண்டின் இறுதியைச் சிறப்பாகக் கொண்டாட மற்றொரு காரணம் தமக்குக் கிடைத்துள்ளது என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினரான யியோ பீ யின் தனது முகநூலில் பதிவிட்டு இருந்தார்.

யியோ பீ யினின் இந்தக் கருத்துக்கு அம்னோ தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரது இந்த நிலைப்பாடு "மனிதாபிமானமற்றது" மற்றும் "அநாகரீகமானது" என்று அம்னோ பொதுச் செயலாளர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி விமர்சித்துள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு முக்கியக் கட்சியின் பிரதிநிதியாக இருந்து கொண்டு, முன்னாள் பிரதமர் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பை இவ்வாறு கொண்டாடுவது முறையல்ல என்றும், இது கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்றும் அம்னோ தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்