Jun 26, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தான் நேஷனல் தனது வேட்பாளரை மார்ச் 20 ஆம் தேதிக்குப் பிறகு அறிவிக்கும்
அரசியல்

பெரிக்காத்தான் நேஷனல் தனது வேட்பாளரை மார்ச் 20 ஆம் தேதிக்குப் பிறகு அறிவிக்கும்

Share:

தாப்பா, மார்ச். 16-

எதிர்வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள பேரா மாநிலத்தின் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் களமிறங்க பெரிக்காத்தான் நேஷனல் தனது வேட்பாளரை வரும் மார்ச் 20 ஆம் தேதி நடைபெறும் சிறப்புக் கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கும். இந்த சந்திப்பில் இறுதி செய்யப்படும் வேட்பாளர்களின் பெயர்கள் பெரிக்காத்தான் நேஷனல் கட்சிக்கு உள்ளது என்று அக்கட்சியின் தேர்தல் இயக்குநர் டத்தோஶ்ரீ முகமட் சனுசி மொஹமட் நோர் கூறினார்.

"தங்களால் முன் வைக்கக்கூடிய வேட்பாளர் ஒரு உள்ளூர் வேட்பாளராக இருப்பார்," என்று நேற்று இரவு இங்கு ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயந்திரத்தை அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

Related News