May 6, 2026
Thisaigal NewsYouTube
பெரிகாத்தான் இனி பாஸ் கட்சியின் பிடியில்: அரசியல் களத்தில் அதிரடி மாற்றம்
அரசியல்

பெரிகாத்தான் இனி பாஸ் கட்சியின் பிடியில்: அரசியல் களத்தில் அதிரடி மாற்றம்

Share:

மாராங், ஜனவரி.23-

நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி, இனி பாஸ் கட்சி பிடியில் சிக்கிய நிலையில் அரசியல் களத்தில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் சிம்மாசனம் பாஸ் கட்சி வசமாகியது என்று அடித்து சொல்கிறார் பாஸ் தலைவர் அப்துல் ஹடி அவாங்.

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவராக இருந்த டான் ஶ்ரீ முகைதீன் யாசின் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி பதவி விலகியதைத் தொடர்ந்து, அக்கூட்டணியைப் பாஸ் கட்சி தலைமையேற்று வழிநடத்தும் என்று ஹாடி அவாங் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பாஸ் கட்சியின் மாநாடான Muktamar- ரில் நிறைவேற்றப்பட்ட முந்தைய தீர்மானத்தின்படியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஹாடி அவாங் சுட்டிக் காட்டினார்.

கூட்டணியின் புதிய தலைவர் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், பாஸ் கட்சியிடம் தகுதியான வேட்பாளர்கள் உள்ளனர் என்று அவர் கூறினார்.

புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான நிர்வாக ரீதியான சந்திப்புகள் இன்னும் ஓரிரு வாரங்களில் இறுதி செய்யப்படும் என்று அவர் விளக்கியுள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி