Apr 22, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் கட்சித் தேர்தல்: நான்கு தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு
அரசியல்

பிகேஆர் கட்சித் தேர்தல்: நான்கு தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.27-

ஜெம்போல், செலாயாங், சீலாம், செம்போர்னா ஆகிய தொகுதிகளில் மே 1ஆம் தேதி பிகேஆர் கட்சி தேர்தலின் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மத்திய தேர்வுக் குழுவின் தலைவர் டாக்டர் ஸலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார். பெறப்பட்ட அதிருப்தி, எதிர்ப்பு குறித்து அக்குழு ஆய்வு செய்யும் என்றும், மே 5ஆம் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கட்சியின் நேர்மைத் தன்மையை உறுதிச் செய்வதற்காக இந்த ஆய்வு செயல்முறை கவனமாகவும், நியாயமாகவும், விவேகமாகவும் மேற்கொள்ளப்படும். அதன் பிறகு தேசிய அளவிலான வாக்குப்பதிவு மே மாதம் தொடரும் என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போட்டியின்றி வெற்றி பெற்ற அல்லது நியாயமான, ஆட்சேபனைகள் இல்லாத கிளைகளின் தலைவர் பதவிகளையும், தேசிய மாநாட்டிற்கான நிகராளிகள் பட்டியலையும் அக்குழு மே 1ஆம் தேதி அறிவிக்கும் என்று ஸலிஹா தெரிவித்தார். இந்தப் பட்டியல் தேசிய மாநாடு, இளைஞர் மாநாடு, மகளிர் மாநாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து தயார் செய்வதற்காக பொதுச் செயலாளர் அலுவலகத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும். அனைத்து கட்சி உறுப்பினர்களும் அமைதியாக இருக்குமாறும், நடைபெற்று வரும் செயல்முறைக்கு நம்பிக்கை அளிக்குமாறும், கட்சியின் ஒற்றுமையைப் பாதுகாக்க ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!