Aug 12, 2026
Thisaigal NewsYouTube
அன்வார், நூருல் இஸாவிற்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் தந்தை ஆவார்: சைஃபுடின் கூறுகிறார்
அரசியல்

அன்வார், நூருல் இஸாவிற்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் தந்தை ஆவார்: சைஃபுடின் கூறுகிறார்

Share:

ஜோகூர் பாரு, மே. 24-

நாட்டின் பிரதமரும், பிகேஆர் கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நூருல் இஸாவிற்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் தந்தை ஆவார் என்று பிகேஆர் முன்னாள் பொதுச் செயலாளரும், உள்துறை அமைச்சருமான டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.

பிகேஆர் துணைத் தலைவர் தேர்தலில் ரஃபிஸி ரம்லியைத் தோற்கடித்து, கட்சியின் புதிய துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நூருல் இஸாவின் வெற்றியைத் தொடர்ந்து தேர்தல் முடிவு குறித்து தாம் கேள்வி எழுப்ப விரும்பவில்லை என்று சைஃபுடின் கூறினார்.

டத்தோஸ்ரீ அன்வாரின் வயது, அவர் கொண்டுள்ள பரந்த அனுபவம், அர்ப்பணிப்பு முதலியவற்றினால், அவரைக் கட்சி உறுப்பினர்கள் மிகவும் நேசிக்கின்றனர் என்று ஜோகூர் பாருவில் நடைபெறும் பிகேஆர் தேசிய பேராளர் மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று உரையாற்றுகையில் சைஃபுடின் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்