Apr 24, 2026
Thisaigal NewsYouTube
கோலகுபு பாரு வெற்றினால் ஒற்றுமை அரசாங்கத் தலைவர்கள் மிதப்பில் திளைக்க வேண்டாம்
அரசியல்

கோலகுபு பாரு வெற்றினால் ஒற்றுமை அரசாங்கத் தலைவர்கள் மிதப்பில் திளைக்க வேண்டாம்

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 17 -

நடந்து முடிந்த கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள தலைவர்கள் மிதப்பில் திளைக்க வேண்டாம் என்று பிகேஆர் கட்சியின் பாசிர் குடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் கரீம் கேட்டுக்கொண்டார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் ஒவ்வொரு தலைவரும், வெற்றி பெற்று விட்டோம் என்று ஒரேடியாக குதூகலத்தின் உச்சியில் மிதக்காமல், தங்கள் கால்களை தரையில் வைத்து, அதன் ஆதரவு தளத்தை வலுப்படுத்தவும், விரிவுப்படுத்தவும், முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்று ஹசன் கரீம் வலியுறுத்தினார்.

கோலகுபு பாரு இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு கணிசமான அளவில் அதிரித்து இருந்தாலும் இளையோர்களின் ஆதரவையும், அவர்களின் வாக்குகளையும் பெறுவதில் தோல்விக் கண்டு இருப்பதால் ஒற்றுமை அரசாங்கத் தலைவர்கள் சற்று அடக்கியே வாசிக்க வேண்டும் என்று ஹசன் கரீம் கேட்டுக்கொண்டார்.

இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிப் பெற்றதற்கு இந்திய சமுதாயத்தின் ஆதரவு பெரும் பங்காற்றியிருப்பதையும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஹசன் கரீம் நினைவுப்படுத்தினார்.

குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் கிடந்த 5 தோட்டங்களைச் சேர்ந்த முன்னாள் பாட்டாளி குடும்பங்களின் வீட்டுப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு அமைச்சர்கள் மேற்கொண்ட முயற்சி, இந்திய சமுதாயத்தின் ஆதரவை திருப்புவதில் வெற்றிக் கிட்டியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!