சிலாங்கூர் மாநிலத்திற்கு ஒரு தகுதியில்லாத மந்திரி புசார், நியமிக்கப்பட்டு இருப்பதாக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா வின் ஆளுமையை சிறுமைப்படுத்தும் வகையில் அவமதிப்புச் சொற்களை பயன்படுத்தியதாக கூறப்படும் கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர், சிலாங்கூர் சுல்தானிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
எனினும் தாம் பேசிய விஷயத்தை பக்காத்தான் ஹராப்பானும் பாரிசான் நேசனலும் திரித்து விட்டதாக முகமட் சனூசி குற்றஞ்சாட்டினார். தாம் பேசிய அந்த உரையின் உண்மையான அர்த்தத்தை விளக்குவதற்காக சிலாங்கூர் சுல்தானுக்கு தாம் கடிதம் அனுப்பியிருப்பதாக பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான முகமட் சனூசி குறிப்பிட்டார்.
தவிர தாம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் உள்ளடக்கத்தை சிலாங்கூர் சுல்தான் படித்ததாக அரண்மனை அதிகாரிகளால் தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட சனூசி, கடிததத்தின் உள்ளடக்கத்தின் மேல் விபரங்களை வெளியிடவில்லை.
இதனிடையே தமது உரை தொடர்பாக போலீஸ் படையினரால் தாம் விசாரிக்கப்பட்டு வருவதை உறுதிப்படுத்திய சனூசி, அதிகாலை 2 மணியளவில் போலீசாருக்கு வாக்குமூலம் அளித்ததாக குறிப்பிட்டார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


