Apr 25, 2026
Thisaigal NewsYouTube
சிலா​ங்கூர் சுல்தானிடம்​ கெடா மந்திரி புசார் முகமட் சனூசி மன்னிப்பு ​கோரினார்
அரசியல்

சிலா​ங்கூர் சுல்தானிடம்​ கெடா மந்திரி புசார் முகமட் சனூசி மன்னிப்பு ​கோரினார்

Share:

சிலாங்கூர் மாநிலத்திற்கு ஒரு தகுதியில்லாத மந்திரி புசார், நியமிக்கப்பட்டு இருப்பதாக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா வின் ஆளுமையை சிறுமைப்படுத்தும் வகையில் அவமதிப்புச் சொற்க​ளை பயன்படுத்தியதாக கூறப்படும் கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் ​நூர், சிலாங்கூர் சுல்தானிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

எனினும் தாம் பேசிய விஷயத்தை பக்காத்தான் ஹராப்பானும் பாரிசான் நேசனலும் திரித்து விட்டதாக முகமட் சனூசி குற்றஞ்சாட்டினார். தாம் பேசிய அந்த உரையின் உண்மையான அர்த்தத்தை விளக்குவதற்காக சிலாங்கூர் சுல்தானுக்கு தாம் கடிதம் அனுப்பியிருப்பதாக பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான முகமட் சனூசி குறிப்பிட்டார்.

தவிர தாம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் உள்ளடக்கத்தை சிலா​ங்கூர் சுல்தான் படித்ததாக அரண்மனை அதிகாரிகளால் தமக்கு தெரிவிக்கப்ப​ட்டுள்ளது என்று குறிப்பிட்ட சனூசி, கடிததத்தின் உள்ளடக்கத்தின் மேல் விபரங்களை வெளியிடவில்லை.

இதனிடையே தமது உரை தொடர்பாக போ​லீஸ் படையினரால் தாம் விசாரிக்கப்பட்டு வருவதை உறுதிப்படுத்திய சனூசி, அதிகாலை 2 மணியளவில் போ​லீசாருக்கு வாக்கு​மூலம் அளித்ததாக குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!