Dec 23, 2025
Thisaigal NewsYouTube
சிலா​ங்கூர் சுல்தானிடம்​ கெடா மந்திரி புசார் முகமட் சனூசி மன்னிப்பு ​கோரினார்
அரசியல்

சிலா​ங்கூர் சுல்தானிடம்​ கெடா மந்திரி புசார் முகமட் சனூசி மன்னிப்பு ​கோரினார்

Share:

சிலாங்கூர் மாநிலத்திற்கு ஒரு தகுதியில்லாத மந்திரி புசார், நியமிக்கப்பட்டு இருப்பதாக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா வின் ஆளுமையை சிறுமைப்படுத்தும் வகையில் அவமதிப்புச் சொற்க​ளை பயன்படுத்தியதாக கூறப்படும் கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் ​நூர், சிலாங்கூர் சுல்தானிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

எனினும் தாம் பேசிய விஷயத்தை பக்காத்தான் ஹராப்பானும் பாரிசான் நேசனலும் திரித்து விட்டதாக முகமட் சனூசி குற்றஞ்சாட்டினார். தாம் பேசிய அந்த உரையின் உண்மையான அர்த்தத்தை விளக்குவதற்காக சிலாங்கூர் சுல்தானுக்கு தாம் கடிதம் அனுப்பியிருப்பதாக பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான முகமட் சனூசி குறிப்பிட்டார்.

தவிர தாம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் உள்ளடக்கத்தை சிலா​ங்கூர் சுல்தான் படித்ததாக அரண்மனை அதிகாரிகளால் தமக்கு தெரிவிக்கப்ப​ட்டுள்ளது என்று குறிப்பிட்ட சனூசி, கடிததத்தின் உள்ளடக்கத்தின் மேல் விபரங்களை வெளியிடவில்லை.

இதனிடையே தமது உரை தொடர்பாக போ​லீஸ் படையினரால் தாம் விசாரிக்கப்பட்டு வருவதை உறுதிப்படுத்திய சனூசி, அதிகாலை 2 மணியளவில் போ​லீசாருக்கு வாக்கு​மூலம் அளித்ததாக குறிப்பிட்டார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு