நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 16-வது சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஜூலை 18 காலை 9 மணியளவில், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட எட்டு வேட்புமனுத் தாக்கல் மையங்களில் அமைதியான சூழலில் தொடங்கி சுமூகமாக நடைபெற்றது.
இந்நிலையில், ஜெம்போல் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலில், டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங், டத்தோ அஷ்ரஃப் வஜ்தி துசுகி, டத்தோ ஸ்ரீ ஃபாமி ஃபாட்சில் உள்ளிட்ட பெரிக்காத்தான் , பாரிசான் மற்றும் பாக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலர் தங்களது வேட்பாளர்களுடன் கலந்து கொண்டனர்.
அவற்றில் ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.
அத்தொகுதியில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான பாரிசான் கூட்டணியைச் சேர்ந்த டத்தோ சைடி அப்துல் காதிர் , பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த ஜி. மணிவண்ணன், பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த ஆர். ஸ்ரீ சஞ்சீவன் மற்றும் அஸ்லி கட்சியைச் சேர்ந்த தயாணா தால் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
இதனால் ஜெராம் பாடாங் தொகுதியில் நால்வருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.








