அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வியும் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான நூருல் இஸா போட்டியிடக்கூடும் என்று கோடி காட்டப்பட்டுள்ளது. கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் இரண்டு முறை தற்காத்து வந்த பினாங்கு, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் தோல்விக் கண்ட நூருல் இஸாசை பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் களம் இறக்கப்படுவதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. எனினும் இது குறித்து நூருல் இஸா இன்னும் தீர்க்கமாக முடிவு செய்யவில்லை என்று அறிவித்துள்ளார். எனினும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா என்பது குறித்து கட்சியின் தலைமைத்துவத்திடமே விட்டு விடுவதாக நூருல் இஸா தெரிவித்துள்ளார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


