மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட உலு சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளரும், அதன் சிலாங்கூர் மாநிலத் தலைருமான முகமது அஸ்மின் அலி வெற்றி பெற்றார். அஸ்மின் அலிக்கும், பக்கத்தான் ஹராப்பானின் பலம் பொருந்திய வேட்பாளரான முன்னாள் புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜுவைரியா சுல்க்ஃப்லி க்கும் இடையில் நடைபெற்ற இந்த பலப்பரீட்சையில் 1,940 வாக்குகள் வித்தியாசத்தில் அஸ்மின் அலி வெற்றிபொற்றார். தனது முன்னாள் அரசியல் மாணவியான 38 வயது ஜுவைரியா வை வீழ்த்த முடியும் என்று கூறி வந்த நிலையில் இந்த நேரடிப் போட்டியில் அஸ்மின் அலிக்கு 19,675 வாக்குகள் கிடைத்தன. ஜுவைரியா 17,735 வாக்குகள் பெற்றார். ஜுவைரியா, கடந்த 2013, 2018 ஆகிய பொதுத் தேர்தல்களில் புக்கிட் மெலாவத்தி தொகுதியில் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றார். அஸ்மின் அலியை வீழ்த்துவதற்காக ஜுவைரியா, புக்கிட் மெலாவத்தியிலிருந்து பிரத்தியேகமாக உலு கிள்ளானுக்கு களம் இறக்கப்பட்டார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்


