மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட உலு சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளரும், அதன் சிலாங்கூர் மாநிலத் தலைருமான முகமது அஸ்மின் அலி வெற்றி பெற்றார். அஸ்மின் அலிக்கும், பக்கத்தான் ஹராப்பானின் பலம் பொருந்திய வேட்பாளரான முன்னாள் புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜுவைரியா சுல்க்ஃப்லி க்கும் இடையில் நடைபெற்ற இந்த பலப்பரீட்சையில் 1,940 வாக்குகள் வித்தியாசத்தில் அஸ்மின் அலி வெற்றிபொற்றார். தனது முன்னாள் அரசியல் மாணவியான 38 வயது ஜுவைரியா வை வீழ்த்த முடியும் என்று கூறி வந்த நிலையில் இந்த நேரடிப் போட்டியில் அஸ்மின் அலிக்கு 19,675 வாக்குகள் கிடைத்தன. ஜுவைரியா 17,735 வாக்குகள் பெற்றார். ஜுவைரியா, கடந்த 2013, 2018 ஆகிய பொதுத் தேர்தல்களில் புக்கிட் மெலாவத்தி தொகுதியில் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றார். அஸ்மின் அலியை வீழ்த்துவதற்காக ஜுவைரியா, புக்கிட் மெலாவத்தியிலிருந்து பிரத்தியேகமாக உலு கிள்ளானுக்கு களம் இறக்கப்பட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


