Jul 16, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்
அரசியல்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

Share:

கூட்டரசு அரசாங்கத்தில் பாரிசான் நேஷனல் கூட்டணியின் நிலை “சாண்ட்விச்சின் நடுவில் இருப்பதைப் போன்றது” என்று துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

15-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு எந்தக் கூட்டணிக்கும் தனித்து ஆட்சியமைக்கத் தேவையான எளிய பெரும்பான்மை கிடைக்காததால், நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்யும் அவசியத்தின் அடிப்படையில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரிசான் நேஷனல் தலைவராக, முன்பு அரசியல் எதிரிகளாக இருந்த கட்சிகளுடன் இணைந்து, பணியாற்ற வேண்டிய பொறுப்பை தொழில்முறை அணுகுமுறையுடன் ஏற்றுக்கொண்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கூட்டரசு அரசாங்கத்தில், ஒரு புறம் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், மறுபுறம் ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கும் இருப்பதால் அவர்களுக்கு நடுவில் தாம் இருப்பதாக ஜாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களுக்கும், நாட்டிற்கும் நன்மை பயக்கும் வகையில் மாமன்னரின் ஆணையின் பேரிலேயே இந்த ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு கோத்தா மாசாய் பகுதியில் நடைபெற்ற பாரிசான் நேஷனல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோது அஹ்மட் ஜாஹிட் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் தேர்தல்: 2 இந்தியர்கள் உட்பட 25 வேட்பாளர்களை அறிவித்தது பாரிசான் நேஷனல்

நெகிரி செம்பிலான் தேர்தல்: 2 இந்தியர்கள் உட்பட 25 வேட்பாளர்களை அறிவித்தது பாரிசான் நேஷனல்

நெகிரி செம்பிலான் தேர்தல்: பெரிக்காத்தான் சின்னத்தைத் தவிர்த்து பெர்சாத்து சொந்த சின்னத்தில் போட்டி

நெகிரி செம்பிலான் தேர்தல்: பெரிக்காத்தான் சின்னத்தைத் தவிர்த்து பெர்சாத்து சொந்த சின்னத்தில் போட்டி

மலாக்கா அரசில் ஜசெகவின் முடிவு மாறாது: பிரதமர் அன்வாரிடம் அந்தோணி லோக் திட்டவட்டம்

மலாக்கா அரசில் ஜசெகவின் முடிவு மாறாது: பிரதமர் அன்வாரிடம் அந்தோணி லோக் திட்டவட்டம்

மலாய் ஒற்றுமையால் அரசியல் அதிகாரத்தை மீட்டெடுக்க முடியும்: துன் மகாதீர் கருத்து

மலாய் ஒற்றுமையால் அரசியல் அதிகாரத்தை மீட்டெடுக்க முடியும்: துன் மகாதீர் கருத்து

ஜோகூர் தேர்தல் தோல்வி: மலாய் வாக்காளர்களின் ஆதரவு சரிவே முக்கிய காரணம்

ஜோகூர் தேர்தல் தோல்வி: மலாய் வாக்காளர்களின் ஆதரவு சரிவே முக்கிய காரணம்

"தைப்பிங் சிறைச்சாலையை இடமாற்றும் திட்டம் இல்லை"– உள்துறை அமைச்சர் சைபுடின் இஸ்மாயில் தகவல்

"தைப்பிங் சிறைச்சாலையை இடமாற்றும் திட்டம் இல்லை"– உள்துறை அமைச்சர் சைபுடின் இஸ்மாயில் தகவல்