Aug 11, 2026
Thisaigal NewsYouTube
துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை
அரசியல்

துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை

Share:

கோலாலம்பூர், மே.08-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் பிரதானக் கூட்டணியாக விளங்கும் பிகேஆர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று காலையில் தொடங்கியது.

இன்று மே 8 ஆம் தேதியும், நாளை 9 ஆம் தேதியும் இரண்டு தினங்களுக்கு நடைபெறும் வேட்புமனுத் தாக்கலில் கட்சியின் தேசியத் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

அதே வேளையில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு காலை 10.30 மணி வரை ஐவர், வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பிகேஆர் கட்சியின் உலு சிலாங்கூர் தொகுதி தலைவர் டாக்டர் சத்திய பிரகாஷ், சுங்கை பூலோ தொகுதி தலைவர் டத்தோஸ்ரீ R. ரமணன், பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஸீ ஸின், செனட்டர் அபுன் சுய் அன்யிட் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் சாங் லீ காங் ஆகிய ஐவர் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக அறியப்படுகிறது.

Related News

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது