நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்காக தகுதியுடைய வாக்காளர்களுக்கு 13,263 தபால் வாக்குச் சீட்டுகள் இன்று விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் அதிகாரிகள், போலீசார், ராணுவத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 12,669 வாக்குச் சீட்டுகளும், வெளிநாட்டில் வாழும் மலேசியர்களுக்கு 343 வாக்குச் சீட்டுகளும், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு 251 வாக்குச் சீட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன. அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த விநியோகம் நடைபெற்றது.
தபால் வாக்காளர்கள் தங்களது வாக்குச் சீட்டுகளைப் பூர்த்தி செய்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி வாக்குப்பதிவு நாள் மாலை 5 மணிக்கு முன் அந்தந்த தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையச் செயலாளர் டத்தோ கைருல் ஷாரில் இத்ரிஸ் நினைவுறுத்தினார். மேலும், வாக்குச் சீட்டுகளைப் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிரக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். இத்தேர்தலில் மொத்தம் 36 தொகுதிகளுக்கு 103 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.








