Mar 5, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டில் தாம் பதுக்கிவைத்திருப்பதாக கூறப்படும் பில்லியன் கணக்கான பணத்தை மீட்டுவர, அன்வார் உதவ வேண்டுமென மகாதீர் கேலியாக கூறுகிறார்.
அரசியல்

வெளிநாட்டில் தாம் பதுக்கிவைத்திருப்பதாக கூறப்படும் பில்லியன் கணக்கான பணத்தை மீட்டுவர, அன்வார் உதவ வேண்டுமென மகாதீர் கேலியாக கூறுகிறார்.

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 31-

வெளிநாட்டில் தாம் பதுக்கிவைத்துள்ளதாக கூறப்படும் பில்லியன் கணக்கான பணத்தை ஏழைகளுக்கு தானமாக வழங்க தாம் தயார். ஆனால், அந்த பணம் இருக்கின்ற இடத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமக்கு தெரிவிக்க வேண்டுமென முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது நக்கலாக தெரிவித்துள்ளார்.

பில்லியன் கணக்கான பணத்தை திருடியவர்கள், அந்த பணத்தை ஏழைகளாக உள்ள மலாய்க்காரர்களுக்கு உதவ வேண்டும் என அன்வார் கூறுகிறார். அந்த பணத்தை ஏழைகளுக்கு வழங்க தாம் தயார்.

ஆனால், அந்த பணம் எங்கே இருக்கின்றது என்பது தமக்கு தெரியவில்லை. பணம் இருக்கின்ற இடம் குறித்து, அன்வார் தமக்கு கொஞ்சம் விளக்கம் அளிக்க வேண்டும்.

சுவிட்சர்லாந்து-ந்தில் அப்பணம் இருக்குமானால், அன்வார் -ருடன் சென்ற அதனை மீட்டுவர தாம் தயாராக இருப்பதாக 98 வயதாகும் மகாதீர் கூறினார்.

ஒருவேளை, வெளிநாட்டிலுள்ள பொருளகங்களில் தமக்கு கணக்குகள் இல்லாவிட்டால், அரசாங்கத்தின் பில்லியன் கணக்கான பணத்தை தாம் களவாடியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கான அடிப்படை ஆதாரம் குறித்து, அன்வார் நீதிமன்றத்தில் பதிலளிப்பாரா?

அவரால் பதிலளிக்க முடியாது என்றால், தமக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்வைப்பதை அன்வார் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென மகாதீர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு