Apr 23, 2026
Thisaigal NewsYouTube
நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நீக்கம் மலேசியாவில் டிக் டாக்  சேவையில் பாதிப்பு இல்லை
அரசியல்

நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நீக்கம் மலேசியாவில் டிக் டாக் சேவையில் பாதிப்பு இல்லை

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 12-

மலேசியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்து இருக்கும் டிக் டாக் நிறுவனத்தின் நடவடிக்கையினால் இந்நாட்டில் டிக் டாக் சேவையில் பாதிப்பு இராது என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் உள்ள டிக் டாக் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று நடத்தப்பட்ட சந்திப்பில் அந்த பன்னாட்டு நிறுவனத்தின் கீழ் வேலை செய்து வரும் தொழிலாளர்களில் 481 பேர் மட்டுமே நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அதேவேளையில் மூவாயிரத்து 700 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்து வருவதால் மலேசியாவில் டிக் டாக் சேவைத் தரத்தில் எந்தவொரு பாதிப்பின்றி தொடர்ந்து செயல்படும் என்று அந்த நிறுவனம் உறுதி அளித்து இருப்பதாக ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

உலகளாவிய நிலையில் டிக் டாக் நிறுவனம் தனது பணியாளர்கள பணி நீக்கம் செய்து வரும் நிலையில், தற்போது மலேசியாவிலும் அதன் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளர்களின் இந்த பணி நீக்கம் குறித்து எடுக்கப்பட்ட முடிவு,
டிக் டாக்கின் உள்ளடக்க மதிப்பாய்வு திறன்களை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!