வரும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஇகாவிற்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதை கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மறுத்துள்ளார்.
மஇகா விற்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்று சரவணன் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தில் செந்தோசா தொகுதியில் மஇகா போட்டியிட்டால் வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்பு இருக்கிறது. அதன் அடிப்படையில் செந்தோசா தொகுதியை மஇகா கோரியது. ஆனால், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் ஆகியவற்றுக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் செந்தோசா தொகுதி பிகேஆர்க்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என்று சரவணன் விளக்கினார்.
இதனிடைய சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் மஇகாவிற்கு மொத்தம் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற இன்னும் உறுதியாக தெரியவில்லை என்று சிலாங்கூர் மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவர் ம.பி, ராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் சுஙாய் துவா, இஜோக் மற்றும் செந்தோசா ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட மஇகா, ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


