வரும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஇகாவிற்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதை கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மறுத்துள்ளார்.
மஇகா விற்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்று சரவணன் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தில் செந்தோசா தொகுதியில் மஇகா போட்டியிட்டால் வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்பு இருக்கிறது. அதன் அடிப்படையில் செந்தோசா தொகுதியை மஇகா கோரியது. ஆனால், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் ஆகியவற்றுக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் செந்தோசா தொகுதி பிகேஆர்க்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என்று சரவணன் விளக்கினார்.
இதனிடைய சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் மஇகாவிற்கு மொத்தம் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற இன்னும் உறுதியாக தெரியவில்லை என்று சிலாங்கூர் மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவர் ம.பி, ராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் சுஙாய் துவா, இஜோக் மற்றும் செந்தோசா ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட மஇகா, ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்


