Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!
அரசியல்

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

Share:

கோலாலம்பூர், ஜனவரி.18-

எதிர்வரும் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில், ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ளும் கொள்கையில் டி.ஏ.பி உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார். அரசியல் கூட்டணியில் நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்த ‘வெற்றி பெற்றவருக்கே முன்னுரிமை’ எனும் கொள்கை அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த மாநிலத் தேர்தலில் டி.ஏ.பி வெற்றி பெற்றிருந்த டுசுன் துவா சட்டமன்றத் தொகுதியை அம்னோவிற்குக் விட்டுக் கொடுத்ததன் மூலம் தனது உண்மையான ஒத்துழைப்பை கட்சி நிரூபித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். இத்தகைய தியாகங்கள் கூட்டணியின் வெற்றிக்காகச் செய்யப்பட்டவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், டி.ஏ.பி ஒரு போதும் ஒத்துழைக்கவில்லை என்ற வாதத்தை அவர் மறுத்தார். கட்சியில் உட்கட்சிப் பூசல்கள் ஏதுமில்லை என்று குறிப்பிட்ட அவர், ஒரு வலுவான தலைமைத்துவத்தின் கீழ் அனைவரும் ஓரணியாக நின்று நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதாகத் தெளிவுபடுத்தினார்.

Related News

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை முடிவு செய்யும் – அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை முடிவு செய்யும் – அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

மத நிந்தனை விவகாரங்கள்: அரசும் காவற்படையும் உடனடி நடவடிக்கை எடுக்கக் துளசி மனோகரன் கோரிக்கை

மத நிந்தனை விவகாரங்கள்: அரசும் காவற்படையும் உடனடி நடவடிக்கை எடுக்கக் துளசி மனோகரன் கோரிக்கை

பேரா மாநில ஜக்காத் : 5.6 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றுக்கொண்டார் சுல்தான் நஸ்ரீன் ஷா

பேரா மாநில ஜக்காத் : 5.6 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றுக்கொண்டார் சுல்தான் நஸ்ரீன் ஷா

மேற்காசியப் போர் பதற்றம்: விலையேற்றத்தைத் தடுக்க மலேசிய அரசு தீவிர கண்காணிப்பு

மேற்காசியப் போர் பதற்றம்: விலையேற்றத்தைத் தடுக்க மலேசிய அரசு தீவிர கண்காணிப்பு

எரிபொருள் மானியம்: மாதத்திற்கு 320 கோடி ரிங்கிட்டை மலேசிய அரசு ஏற்கிறது

எரிபொருள் மானியம்: மாதத்திற்கு 320 கோடி ரிங்கிட்டை மலேசிய அரசு ஏற்கிறது

பள்ளிகளில் தீவிரவாதம் ஊடுருவுவதைத் தடுக்க கண்காணிப்புகள் தீவிரம் – கல்வி அமைச்சு தகவல்

பள்ளிகளில் தீவிரவாதம் ஊடுருவுவதைத் தடுக்க கண்காணிப்புகள் தீவிரம் – கல்வி அமைச்சு தகவல்