மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், கோலசிலாங்கூர் முன்னாள் ஈஜோக் சட்டமன்ற உறுப்பினருமான பார்த்திபன் கருப்பையா, பெரிக்காத்தான் நேஷனலில் இணைந்தார். பெரிக்காத்தான் நேஷனல் தொடங்கியுள்ள இந்தி சமுகத்திற்கான சிறப்பு செயலகத்தின் கோல சிலாங்கூர் பொறுப்பாளராக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு ஈஜோக் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ க. சிவலிங்கம் காலமானதைத் தொடர்ந்து அன்றைய மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலுவினால் ஈஜோக் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் ஆசிரியரான பார்த்திபன், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் புக்கிட் மெலாவத்தி தொகுதியில் களம் இறக்கப்படவிருக்கிறார். சிலாங்கூர் மாநிலத்தில் மஇகாவிலிருந்து வெளியேறியுள்ள இரண்டாவது முக்கியத் தலைவராக பார்த்திபன் விளங்குகிறார். தனது அரசியல் குருவான தஞ்சோங் காராங் முன்னாள் எம்.பி. டத்தோ நோஹ் ஒமாரின் அலோசனையுடன் நேற்று கோலசிலாங்கூரில் நடைபெற்ற பெரிக்காத்தான் நேஷனல் இந்திய சமூகத்தின் சிறப்பு செயலாகப்பிரிவின் தொடங்கவிழாவில் பார்த்திபன் வரவை சிலாங்கூர் மாநிலத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின்அலி அறிமுகப்படுத்தினார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


