வரும் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே வாக்களிப்பு, நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு ஏககாலத்தில் தொடங்கியது. போலீஸ்காரர்கள், இராணுவ வீரர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடவிருக்கும் தேர்தல் ஆணையத்தின் பணியாளர்கள் என 98 ஆயிரத்து 785 பேர் முன்கூட்டியே வாக்களிக்கவிருக்கின்றனர். கோலத் திரெங்கானு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் உட்பட 6 மாநிலங்களுக்கான தேர்தல் வாக்களிப்பு மையங்கள் கட்டம் கட்டமாக திறக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த முன்கூட்டியே வாக்களிப்பில் 46 ஆயிரத்து 660 இராணுவ வீரர்களும் , 47 ஆயிரத்து 726 போலீஸ்காரர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை


