6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று மஇகாவும், மசீச.வும் எடுத்துள்ள முடிவு, ஒற்றுமை அரசாங்கத்திலும், தேர்தலை எதிர்கொள்வதற்கு இதர கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் கேந்திரத்தை முடுக்கி விடும் திட்டத்திலும் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
எனினும் ஒற்றுமை அரசாங்கம் சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதற்கு தங்களின் தார்மீக ஆதரவை இரு கட்சிகளும் வழங்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அன்வார் குறிப்பிட்டார். தேர்தலில் போட்டியிடாதது குறித்து அவ்விரு கட்சிகளும் தம்முடன் தொடர்பு கொண்டு தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்து இருப்பதாக அன்வார் கூறினார்.
அதேவேளையில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு தங்களின் ஆதரவு தொடரும் என்று அவை உறுதி தெரிவித்துள்ளன. இருப்பினும் மஇகாவும் மசீச.வும் பாரிசான் நேஷனலில் ஓர் அங்கமாக இருப்பதால் இவ்விவகாரம், பாரிசான் நேஷனலின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும் என்று தாம் கருதுவதாக அன்வார் குறிப்பிட்டார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


