Apr 23, 2026
Thisaigal NewsYouTube
மோசடிப் பேர்வழிகளுக்கு இரவல் தரும் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்
அரசியல்

மோசடிப் பேர்வழிகளுக்கு இரவல் தரும் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்

Share:

கோலாலம்பூர், நவ. 18-


ஓன் லைன் மோசடிகளில் ஏமாற்றுப் பேர்வழிகளின் மோசடி வேலைகளுக்கு தங்களின் வங்கிக் கணக்கை இரவலாக தரும் நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்பதுடன் அவர்களின் பணமும் பறிமுதல் செய்யப்படும் என்று சட்டத்துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி அமலுக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் நபர்களின் வங்கிக்கணக்கை முடக்குவதற்கும், அவர்களின் சேமிப்புப்பணத்தை பறிமுதல் செய்வதற்கு போலீஸ் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று குலசேகரன் குறிப்பிட்டார்.

இரவலாக தரப்பட்டுள்ள வங்கிக்கணக்குகளைப் பயன்படுத்தி, தாங்கள் நடத்தும் மோசடி வேலைகள் மூலம் பெறப்படுகின்ற பணம், சம்பந்தப்பட்ட வங்கிக்கணக்கிலிருந்து எடுக்கப்படுவதை தடுக்க இச்சட்டம் வகை செய்கிறது.

குறிப்பாக. சந்தேகத்திற்கு இடமாக உள்ள வங்கிக் கணக்குகளில் பணம் பரிமாற்றம் நடைபெறுவது, ஐயத்திற்கு இடம் அளிக்குமானால் அந்த வங்கி கணக்குகளை முடக்குவதற்கு குற்றவியல் சட்டம் 116 டி பிரிவு, போலீஸ் துறைக்கு அதிகாரம் வழங்குகிறது என்று நாடாளுமன்றத்தில் துணை அமைச்சர் குலசேகரன் விளக்கம் அளித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!