- ஆட்சிக்குழுவில் ஓர் இடம் வழங்கப்படும்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் அம்னோவினால் இரண்டு இடங்கள் மட்டுமே வெற்றி பெற முடிந்தது என்றாலும், அக்கட்சியுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை மாநிலத்தில் நிறுவுவதற்கு டிஏபி தலைமையிலான மாநில அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு நடைபெற்ற டிஏபியின் உச்சமன்றக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. டிஏபி தலைமையிலான பினாங்கு மாநில பக்காத்தான் ஹராப்பான் பாரிசான் நேஷனல் அரசாங்கத்தில் அம்னோவிற்கு நிச்சயம் ஓர் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் சட்டமன்றத் தேர்தலில் அம்னோவின் மோசமான அடைவு நிலையினால் டிஏபி யுடன் கட்சி கொண்டுள்ள ஒத்துழைப்பையும், உறவையும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று அம்னோ தலைவர் ஒருவர் கோரிக்கை விடுத்து இருந்த போதிலும், அது அம்னோவின் நிலைப்பாடு அல்ல என்று அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார். இந்நிலையில் பெர்த்தாம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அம்னோவை சேர்ந்த ரீசல் மெரிகன் நைனா மெரிகன்னுக்கு பினாங்கு முதலாவது துணை அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.








